Home » » யார் உத்தரவின் பேரில் கடாபி கொல்லப்பட்டார்?: திடுக்கிடும் தகவல்

யார் உத்தரவின் பேரில் கடாபி கொல்லப்பட்டார்?: திடுக்கிடும் தகவல்

Written By STR Rahasiyam on Monday, October 1, 2012 | 2:21 PM

km
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி சார்க்கோஸியின் உத்தரவின் பேரில் அந்நாட்டு இரகசிய சேவைப் பிரிவைச் சேர்ந்த ஒருவராலேயே லிபிய முன்னாள் தலைவர் கடாபி கொல்லப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கடாபி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி தனது சொந்த ஊரான கிரிட்டில் வைத்து கொல்லப்பட்டார்.
லிபிய புரட்சியில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த வெளிநாட்டு முகவர் ஒருவரே கடாபியை கொன்றதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மேற்படி வெளிநாட்டு முகவர் பிரான்ஸ் நாட்டவராக இருக்கலாம் என இத்தாலிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லிபிய புரட்சிக்கு பிரான்ஸ் நிகொலஸ் சார்க் கோஸியின் அரசாங்கம் ஆரம்பம் முதல் மிகுந்த ஆதரவளித்து வந்தது. 2007ஆம் ஆண்டு தேர்தலில் சார்க்கோஸி வேட்பாளராக போட்டியிட்ட போது அவருக்கு மில்லியன் கணக்கான பண உதவி வழங்கப்பட்டமை உள்ளடங்கலாக அவருடனான தனது உறவை அம்பலப்படுத்தப் போவதாக கடாபி பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
இதன் காரணமாக கடாபியை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மௌனமாக்குவதற்கு தேவையான முயற்சியில் சார்க்கோஸி ஈடுபட்டதாக திரிபோலி வட்டாரமொன்றை மேற்கோள்காட்டி மேற்படி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் மத்தியில் ஊடுருவிய வெளிநாட்டு முகவரான 22 வயது இளைஞரே கடாபியை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண் ஒம்ரான் ஷபான் என்ற மேற்படி இளைஞர் கடாபியின் ஆதரவாளர்களால் கடந்த ஜூலை மாதம் தாக்கப்பட்டதையடுத்து பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார்.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger