Home » » சம்மாந்துறை இளைஞர் மரணத்தில் சந்தேகம்; சடலம் தோண்டியெடுப்பு!

சம்மாந்துறை இளைஞர் மரணத்தில் சந்தேகம்; சடலம் தோண்டியெடுப்பு!

Written By STR Rahasiyam on Tuesday, June 12, 2012 | 11:29 AM



கடந்த மாதம் 30ஆம் திகதி சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளினையடி 01ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மட் தம்பி முஹம்மட் ஜெசீல் (வயது – 23)என்பவர் மரணித்து சம்மாந்துறை மஸ்ஜிதுல் முஹல்லா மஹல்லா மைய வாடியில் நல்லடக்கம் நடைபெற்றது.
இம்மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அக்குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் சம்மாந்துறை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து சம்மாந்துறை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட வழக்கிற்கு அமைவாக நல்லடக்கம் செய்யப்பட்ட சடலத்தை பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் உத்தரவை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி கனகரத்தினம் ஆனந்தி பிறப்பித்தார்.
இதற்கமைவாக இன்று சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இதன்போது சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி கனகரத்தினம் ஆனந்தி, அம்பாறை சட்டவைத்திய அதிகாரி எம்.ஜீ.எஸ்.ஆர்.மஹகமகே, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க,பெருங்குற்றவியல் பொறுப்பதிகாரி எஸ்.எம்.இப்றாஹீம் உட்பட சொக்கோ புலலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். சடலம் அம்பாறை பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 width=
 width=
 width=
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger