Home » » பேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விட்ட இலங்கையருக்கு மறியல்

பேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விட்ட இலங்கையருக்கு மறியல்

Written By STR Rahasiyam on Monday, October 1, 2012 | 2:15 PM

தன்னோடு வேலை செய்த பிலிப்பைன்ஸ் பெண் தன்னை திருமணம் செய்யாதுவிடின் கொன்றுவிடுவேன் என பேஸ்புக் ஊடாக பயமுறுத்திய 33 வயது இலங்கையரான மின் தொழிலாளி ஒருவருக்கு ஐக்கிய அரபு ஏமிரேட்ஸ் நீதிமன்றம் மூன்று மாத மறியல் தண்டனை விதித்தது. 

தண்டை காலம் முடிந்ததும் இவரை நாட்டை விட்டு அனுப்பி விட வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.  விசாரணையின் போது மின் தொழிலாளியான இந்த இலங்கையர், ஒரு வருடமாக தாம் இருவரும் காதலர்களாக இருந்ததாக கூறி காலிஜ் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

தான் இப்பெண்ணுக்கு 1,000 டினார் கடன் கொடுத்ததாகவும் அவர் அதை திரும்ப தரவில்லை எனவும் அத்துடன் தனது தொலைபேசி அழைப்புக்களை அலட்சியம் செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இவர் பேஸ்புக் மூலம் கொலை மிரட்டல் விட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் இவர் தன்னை மணம் செய்யும் படி கேட்டதாகவும் தான் மறந்துவிட்டதாகவும் கூறினார். இந்த தீர்ப்பை எதிர்த்து 15 நாட்களுக்குள் மேன் முறையீடு செய்ய முடியும் என நீதிமன்றம் தெரிவித்தது. 
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger