Home » » சல்மான் ருஷ்டியின் தலையை கொண்டுசென்றால் வழங்கப்படும் பரிசுத் தொகை அதிகரிப்பு

சல்மான் ருஷ்டியின் தலையை கொண்டுசென்றால் வழங்கப்படும் பரிசுத் தொகை அதிகரிப்பு

Written By STR Rahasiyam on Monday, September 17, 2012 | 12:46 AM


JM
சர்ச்சைக்குரிய ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் தலைக்கு, ஈரான் முஸ்லிம் அமைப்பு, கூடுதலாக, 2 கோடியே 71 லட்சம் (இந்திய ரூபா) சன்மானம் அறிவித்துள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சல்மான் ருஷ்டி எழுதிய, "சாத்தானின் வேதங்கள்' என்ற புத்தகத்தில் முஸ்லிம்களைப் பற்றி அவதூறு செய்திகள் இடம்பெற்றிருந்ததாக புகார் கூறப்பட்டது. இதற்காக, ஈரான்  தலைவர் அயதுல்லா கோமெனி, ருஷ்டிக்கு மரண தண்டனை அறிவித்திருந்தார். இதன் காரணமாக, ருஷ்டி, பிரிட்டனில் பல ஆண்டுகள், தலைமறைவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின், "கொர்தாத் பவுண்டேஷன்' என்ற அமைப்பு, சல்மான் ருஷ்டி தலைக்கு, அப்போது, 18 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தது.

தற்போது, முஸ்லிம்களுக்கு எதிராக வெளியான சர்ச்சைக்குரிய அமெரிக்கப் படம், உலகம் முழுவதும் கலவரத்தைக் கிளப்பி உள்ளது.

எனவே, கொர்தாத் அமைப்பு, ருஷ்டியின் தலைக்கு தற்போது, கூடுதலாக சன்மானம் அறிவித்துள்ளது. "ருஷ்டியை முன்பே கொன்றிருந்தால், இஸ்லாமை அவமதிக்கும் இதுபோன்ற செயல்கள் நடந்திருக்காது. அவரைக் கொல்லாவிடில், இதுபோன்ற முஸ்லிம் அவமதிப்பு சம்பவங்கள் நடப்பது முற்றுப் பெறாது' எனக் கூறி, அவரது தலைக்கு கூடுதலாக, 2 கோடியே 71 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்துள்ளது.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger