Home » » ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஊடகவியலாளர் மாநாடு (வீடியோ இணைப்பு)

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஊடகவியலாளர் மாநாடு (வீடியோ இணைப்பு)

Written By STR Rahasiyam on Sunday, November 25, 2012 | 1:28 AM


காஸா மீதான இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதல்களையும் பாலியல் சம்பந்தமாக தமிழ் ஊடகமொன்றுக்கு ஸர்மிலா ஷெய்யித் வழங்கிய இஸ்லாத்துக்கு முரனான கருத்து மற்றும் விஸ்பரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள் என்பவற்றை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது.
இது சம்பந்தமாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாடு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில்  சனிக்கிழமை (24-11-2012) கொம்பனித்தெரு நிப்பன் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஆர்.எம்.றியாஸ், பொதுச் செயலாளர் அப்துல் ராசிக், தேசிய பேச்சாளர்; எப்.எம்.றஸ்மின் மற்றும் துணைச் செயலாளர் றீஸா யூசுப் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
கடந்த வாரம் நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் மாத்திரம் 36 மஸ்ஜிதுகள், 25 பாடசாலைகள், ஒரு வைத்தியசாலை, 2 விளையாட்டு அரங்குகள், 2 பாலங்கள், 100 வீடுகள் உட்பட கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்தையும் தாண்டி ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என  160 க்கு மேற்பட்ட அப்பாவிகளது உயிர்கள் அரக்கத்தனமாய் காவுகொள்ளப்பட்டுள்ளதோடு 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருக்கின்றனர்.
இவையாவும் உத்தியோகபூர்வ அறிக்கைகள் மாத்திரமே! உத்தியோகபூர்வமற்ற அறிக்கைகளின் பிரகாரம் ஏற்பட்டுள்ள உயிர்சேதங்களும், சொத்துக்களுக்குமான சேதங்களும் அதனைவிட பன்மடங்கு அதிகமாகும்.
வரலாற்றுரீதியில் ஆய்வு செய்வோமேயானால், பாலஸ்தீன பூமியில் பூர்வீக குடிகள் முஸ்லிம்களே என்பது பட்டவத்தனமாய் பளிச்சிடும் உண்மையாகும். 1948 வரைக்கும் உலக வரைபடத்தில் இல்லாத இஸ்ரேல் என்ற நாடு, 1948 க்கு பின்னர் உலகின் ஜனநாயகவாதிகள் நாம் தாம் என்;று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கூட்டினைவால் கருத்தரித்து, தப்பான வழியில் பெற்றெடுக்கப்பட்ட ஒரு விபச்சாரக் குழந்தை என்பதை வரலாற்று ஆய்வாளர்களால் மறுதலிக்க முடியாது.
முஸ்லிம்களுக்கு உரித்தான பாலஸ்தீன் மண்ணில் பலவந்தமாய் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது மட்டுமன்றி, எஞ்சியுள்ள காஸா நிலப்பரப்பையும் கபளீகரம் செய்து, முழுமையான இனச்சுத்திகரிப்பொன்றை அரங்கேற்றுவதோடு, மத்திய கிழக்கில் விரிந்த நிலப்பரப்பில் யூதர்களின் கனவு இராச்சியமான ‘அகன்ற இஸ்ரேலை’ நிறுவுவதற்கான முஸ்தீபுகளின் ஒன்றே அண்மைய தாக்குதல்கள் ஆகும்.
எனவே இஸ்ரேலின் நரித்தன சூழ்ச்சியினையும், தங்களது நலனுக்காய் அப்பாவி பலஸ்தீன் மைந்தர்களின் உயிரோடு விளையாடும் காட்டுமிராண்டித்தனத்தையும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்;டிக்கின்றது. அத்தோடு இஸ்ரேலின் நலன்கள் காக்கப்படுவதற்காய் கண்ணுங்கருத்துமாய் காய் நகர்த்தும் அமரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் அயோக்கியதனத்தையும் எமது ஜமாஅத் கண்டிக்கின்றது. மேலும் பாலஸ்தீன் பூமியை ஆக்கிரமித்து அராஜகம் புரியும் பயங்கரவாத நாடான இஸ்ரேலுக்கு தமது நாட்டு தூதுவர்களை நியமித்து, அயோக்கியர்களோடு உறவுபாராட்டும் துரோகத்தை அனைத்து முஸ்லிம் நாடுகளும் கைகழுவ வேண்டும் என்று கோரிக்கையையும் இந்த ஜமாஅத் விடுக்கின்றது.
அனைத்தையும் தாண்டி, ஓ.ஐ.சி எனும் இஸ்லாமிய நாடுகளுக்கான ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 57 நாடுகளும் வெறுமனே கூடிக்களைவதை கைவிட்டு, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் களம் இறங்க வேண்டும் என்று கோரிக்கையும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் விடுக்கின்றது.
ஸர்மிலா ஷெய்யதின் கருத்துக்கள் குறித்து கூறுகையில்:
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்குவது நல்லவிடயமாகும் என சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிலா ஷெய்யித் பிபிசீ தமழோசைக்கு வழங்கிய  பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாம் வன்மையாக கண்டிக்கும் விபச்சாரத்தை தொழிலாக இலங்கையில் அங்கீகரிக்குமாறு முஸ்லிம் எழுத்தாளர் என்று தன்னை கூறிக்கொள்ளும் ஸர்மிலா ஷெய்யித் தெரிவித்துள்ள கருத்தை ஸ்ரீலங்க தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கின்றது.
திருமணம் என்ற பதத்தின் மூலம் மாத்திரம்தான் ஒருவர் தனது உடலியல் தேவையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் உலக மாந்தர்களுக்கு கட்டளை இட்டுள்ளது. அனைவரும் ஒழுக்கமாகவும் உயரிய நற்சிந்தனையுடனும் வாழ்வதற்கு இதுதான் வழியாக இருக்கின்றது.
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று சொன்னவர் தற்போது நான் இப்படித்தான் சொன்னேன்; அப்படித்தான் சொன்னேன் என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப்போல் பேசுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
விபச்சாரம் இஸ்லாத்தில் கராமாக்கப்பட்டது(தடுக்கப்பட்டது) என்பது தனக்கு தெரியும் என்றும் தெரிந்து கொண்டுதான் இந்தக் கருத்தை கூறினேன் என்றும் ஸர்மிலா ஷெய்யித் கூறுவது அவரின் வீம்புத்தனத்தை தெளிவாக உணர்த்துகின்றது.
முழுமையாக நாம் இஸலாமிய மார்க்கததுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் நமது செயற்பாடுகளால் புனித இஸலாத்துக்கு எதுவித கலங்கமும் வந்துவிடக்கூடாது. எனது மகளை பின்புலத்திலிருந்து யாரோ பிழையாக வழிநடத்தி தங்களது நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அவரை பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. அந்த வழிக்கு எமது மகளை விட்டுவிடாமல் மீண்டும் இந்த சமுதாயத்தில் வந்து இணைந்து நிம்மதியாக வாழ்வதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து தாருங்கள் என்று ஸர்மிலா ஷெய்யதின் தந்தை குறிப்பிட்டுள்ள கருத்தும் இங்கு அவதானிக்க தக்கதாகும்.
விபச்சாரம் உலகம் முழுவதும் ஒழுக்கம் கெட்டவர்களையும் வெட்கம் அற்ற ஒரு சமுதாயத்தையும்தான் தோற்றுவித்துக்கொண்டு இருக்கின்றது. இப்டியான சூழலில் சர்மிலா போன்றவர்கள் உடகங்களில் தங்கள் பெயர் பேசப்பட வேண்டும் என்பதற்காக இதுபோன்று அசிங்கமான கருத்துக்களை பேசுவதையும் எழுதுவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்வதுடன் உண்மையான இஸ்லாமிய குடும்பப்பெண் இதுபோன்ற கருத்துக்களை பேசுவதையோ பரப்புவதையோ நினைத்துக்கூட பார்க்கமாட்டாள் என்பதே உண்மையாகும்.
விஸ்வரூபம் திரைப்படம் குறித்து தெரிவிக்கையில்:
கமலஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் விதமான பல காட்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் காட்சிகள்தான் முழுக்க முழுக்க அதில் இடம்பெற்றிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
விஸ்வரூபம் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளிலேயே முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்படுவதுடன், முஸ்லிம்கள் தொழும் காட்சியும், புனித திருமறை குர்ஆனின் ஓதல் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
திரைப்படங்கள், இணையதளங்கள், காட்சி ஊடகங்கள் போன்றவற்றினூடாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், தீவிரவாதிகளுக்கு துணை செல்பவர்களாகவும் தொடராக தப்பான பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலாகும்.
அமைதியையும், நல்லொழுக்கத்தையும் போதிக்கும் தூய்மையான மார்க்கத்தை சினிமாக்கள் மூலம் பொய் பிரச்சாரம் செய்து மக்கள் மத்;தியில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணத்தை பரப்ப முனைவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
கமலஹாசனை பொறுத்த வரையில் முஸ்லிம்களுக்கு எதிராக இதற்கு முன்பாகவும் சினிமாக்கள் எடுத்த பின்பு மன்னிப்பும் கேட்டிருந்தால் சினிமாவை தயாரிப்பதும் மன்னிப்பு கேட்பதும் இவருடைய வழமையாக மாறிவிட்டது. உன்னைப்போல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் முஸ்லிம்களை இவர் ஏற்கனவே தீவிரவாதிகளாக சித்தரித்திருந்தமை இங்கு நினைவூட்டத்;தக்கதாகும்.
விஜய்யின் துப்பாக்கி திரைப்படத்திலும் இதே நிலைமை உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் திரையுலகின் முன்னனி ஹீரோக்கலாக அறியப்படும் சூரியா, விஜயகாந்த், ரஜனிகாந்த், விக்ரம் போன்றவர்களும் இதே பாணியில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் குண்ட வைப்பவர்களாகவும், கறுப்பு பணத்தை பாதுகாப்பவர்களாகவும் தொடர்ந்தும் காட்சிப்படுத்துவதுடன் முழு திரையுலகமும் இந்த காரியத்தில் ஈடுபடுகின்றது.
நாய் குரைத்தாலும் நமக்கென்ன? என்று இவற்றை விட்டுவிட முடியாது காரணம் நாய் தொடர்ந்தும் குரைத்துக் கொண்டிருந்தால் அது ஏன் குரைக்கின்றது என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
அதுபோல் சினிமாக்காரர்கள் எப்போதும் இதைத்தானே செய்கிறார்கள் என்றிருக்க முடியாது. ஏன் இப்படி முஸ்லிம்களை பற்றி மாத்திரம் இல்லாத பொய்யை சொல்லி மற்ற இன மக்களுக்கு மத்தியில் தீய எண்ணத்தை பரப்ப முயல்கிறார்கள் என்பதை நாம் அவதானித்து தக்க பாடம் புகுத்;த வேண்டும்.
பல்லின மக்களும் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இன முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு தீய சக்திகள் முனையும் இவ்வேளையில் இது போன்ற சினிமாக்களின் வருகை அவர்களுக்கு எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பதாக அமைந்து விடும்.
இதை இனியும் நாம் சகித்துக் கொள்ள முடியாது. அண்ணன் தம்பிகளாக வாழும் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதை பொறுத்துக் கொண்டால் நாம் முற்றிலுமாக அந்நியப்பட்டு போவோம்.
அமைதியாக வாழும் இலங்கை மக்கள் மத்தியில் இன்னொரு பிரிவினையை இதுபோன்ற திரைப்படங்கள் உருவாக்கி விடும். இதை உணர்ந்து கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும். இது சினிமாக்கூத்தாடிகளின் கற்பனை என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூதாயத்தின் வாழ்க்கை பிரச்சினை முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையில் சிறு தகராறுகள் எழுந்தால்கூட மாற்றுமத அன்பர்கள் முஸ்லிம்களை அழித்தொழிக்க நினைக்கும் அளவுக்கு இதுபோன்ற படத்தின் காட்சிகள் மற்றவர்களுக்கு வெறியேற்றுகின்றன.
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது அநியாய போர் தொடுப்பதை விஜய், கமல் போன்ற அயோக்கியர்கள் திரைப்படமாக தயாரிப்பார்களா? அமெரிக்க அயோக்கிய அரசாங்கத்தின் லீலைகளை படம் எடுப்பானா? உலகமகா தீவிரவாதிகள் கூட்டத்தை சேர்ந்தவன் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க துணிவு பெற்றுள்ளான்.
இனிமேல் செய்ய வேண்டியது என்ன?
பணம் சம்பாதிப்பதற்காக கட்டிய மனைவியைகூட கூட்டிக்கொடுக்கும் கூத்தாடி கும்பலின் இந்த போக்கை இனியும் சகித்துக் கொள்ள முடியாது. இது போன்ற கருத்துக்கள் விதைக்கப்பட்டால் அதன் விளைவாக
1.       முஸ்லிம்கள் அழிக்கப்படுவார்கள்
2.       அவர்களின் சொத்துக்கள் சூரையாடப்படும்
3.       அக்கம் பக்கத்தில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத மக்கள் சந்தேகத்துடன் முஸ்லிம்களை பார்ப்பார்கள்
4.       இன்னும் வேண்டாத பல விளைவுகள் ஏற்படும்
என்பதினால்தான் இதுபோன்ற திரைப்படங்களை இலங்கையில் வெளியிட அனுமதிக்க கூடாது என்று நாம் அழுத்தமாய் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger