Home » » உன்னிச்சை பள்ளிவாசல் இனந்தெரியாத குழுவினரால் தீக்கீரை.(பட இணைப்பு)

உன்னிச்சை பள்ளிவாசல் இனந்தெரியாத குழுவினரால் தீக்கீரை.(பட இணைப்பு)

Written By STR Rahasiyam on Sunday, August 12, 2012 | 7:34 AM



மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற பிரதேசமான உன்னிச்சை, பாலக்கொடிச்சேனை கிராமத்திலுள்ள முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது என வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
உழவு இயந்திரமொன்றில் வந்த இனந்தெரியாத குழுவினராலேயே குறித்த பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன் குறித்த மீள்குடியேற்ற கிராமத்திலுள்ள நான்கு தற்காலிக குடிசைகள் மற்றும் ஒரு கடை ஆகியனவும் இதன்போது குறித்த இனந்தெரியாத
குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன எனவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த கிராமத்தில் வசித்து வந்த 52 வயதான சபினோன என்ற பெண்மனி நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் கோடரியினால் வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
தற்போது குறித்த பெண்மனி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார், விசேட அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் விசாரணைகளுக்காக குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger