Home » » அக்கரைப்பற்றில் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் மோதல்.

அக்கரைப்பற்றில் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் மோதல்.

Written By STR Rahasiyam on Monday, August 13, 2012 | 1:55 PM


அக்கரைப்பற்று மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பகுதிகளில் இரு அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையிலேயே இம்மோதல் ஏற்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று வெல்ல பாதுகாப்பு வீதியில் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நடைபெறவிருந்த இடத்தின் மீது அமைச்சர் அதாவுல்லாவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. 

அக்கரைப்பற்றில் வைத்து அட்டாளைச்சேனை நியாஸ் என்பவர் தாக்கப்பட்டு அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் மற்றும் அட்டாளைச்சேனை சுபியான் றமீஸ், மிஸ்வர் ஆகியோர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்

அதன் பின்னர் பதற்றம் நிலவியதாகவும் அமைச்சர் ஹக்கீம் அக்கரைப்பற்று சென்று கொண்டிருந்தபோது பாதுகாப்பு பிரச்சினையால் அட்டாளச்சேனையில் இருந்துள்ளார்.

எனினும் அட்டாளச்சேனையிலும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் வாகனங்களுக்கு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை தனிக்க தற்போது அங்கு பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி இம்போட் நியூஸ்

Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger