Home » » மகா கொடுமை - 18 மாத குழந்தை மீது 13 வயது மாணவன் பாலியல் வல்லுறவு

மகா கொடுமை - 18 மாத குழந்தை மீது 13 வயது மாணவன் பாலியல் வல்லுறவு

Written By STR Rahasiyam on Friday, July 13, 2012 | 3:54 AM


ஒன்றரை வயது நிரம்பிய பச்சிளம் குழந்தையை 13 வயதான சிறுவன் ஒருவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரான மாணவனும் குழந்தையின் சகோதரனும் பாடசாலை நண்பர்களாவர். சம்பவ தினத்தன்று மேற்படி வீட்டுக்கு வந்த சந்தேக நபரான சிறுவனை வரவேற்ற தாயார், தனது மகன் வெளியில் சென்றிருப்பதாகவும் தான் தண்ணீர் எடுத்து வரும் வரை சிறிது நேரத்துக்கு குழந்தையைப் பார்த்துக் கொண்டிருக்குமாறும் கூறி தாயார் வெளியில் சென்றுள்ளார்.

திரும்பி வந்து பார்த்த போது தாயாருக்கு நடந்த சம்பவம் புரிந்துள்ளது. உடனடியாக சியம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்துக்கு புகார் செய்துள்ளார். அதன்பின் குழந்தை மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

குறித்த மாணவனைக் கைது செய்த பொலிஸார், கடந்த எட்டாம் திகதி மொனராகலை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்தனர். நீதிபதி மாணவனை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

Share this article :

1 comments:


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger