
முபாரக் ஆட்சி காலத்தில், தளர்த்தப்பட்டிருந்த இஸ்லாமிய நடைமுறைகள், முர்சியின் ஆட்சியில் கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, வரும் 21ம் தேதி, ரம்ஜான் மாதம் துவங்குகிறது. இதையொட்டி, "மரியா' என்ற "டிவி' சேனல் கெய்ரோவில் துவக்கப்பட உள்ளது. இந்த "டிவி' சேனலில் விசேஷம் என்னவென்றால், முழுக்க முழுக்க பெண்களை கொண்டு இயங்குவது தான். "டிவி' நிலைய இயக்குனர், கேமராவை இயக்குபவர், வர்ணனையாளர்கள், நிருபர்கள் என அனைத்து தரப்பினரும் பெண்கள் தான்.
இவர்கள் அனைவரும், பர்தா அணிந்து தான் பணிபுரிய உள்ளனர். முதல் கட்டமாக ஆறு மணி நேர ஒளிபரப்பு 21ம் தேதி துவங்குகிறது.
0 comments:
Post a Comment