Home » » கட்டாரில் திருடனை பிடிக்கச்சென்ற இலங்கை முஸ்லிம் இளைஞர் வபாத்தானார்.

கட்டாரில் திருடனை பிடிக்கச்சென்ற இலங்கை முஸ்லிம் இளைஞர் வபாத்தானார்.

Written By STR Rahasiyam on Sunday, June 17, 2012 | 11:28 PM

கட்டார் பின் மஹமுத் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 23 வயதுடைய மொஹமட் மர்சிட் என்ற இலங்கை இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பணிபுரிந்த வர்த்தக நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்த ஒருவர் பணம் செலுத்தாமல் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இந்த சமயத்தில் குறித்த நபரை தப்பிச் செல்ல விடாது மொஹமட் மர்சிட் அவருடைய காரின் கண்ணாடியை பிடித்துக் கொண்டிருந்த வேளை கார் வேகமாகச் செல்ல தொடங்கிய வேளை விபத்து ஏற்பட்டுள்ளது.

வர்த்தக நிலையத்தில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தை கடந்த பின் மொஹமட் மர்சிட் காரில் இருந்து கீழே விழுந்துள்ள நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தலையில் ஏற்பட்ட கடும் காயத்தால் மொஹமட் மர்சிட் உயிரிழந்துள்ள நிலையில் காரின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.

உயிரிழந்த மொஹமட் மர்சிட் சுமார் இரண்டு வருட காலமாக தமது வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து வந்ததாக அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

1 comments:

  1. மேலும் ஏதாவது தகவல் உள்ளதா?

    ReplyDelete


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger