Home » » மாற்று மதத்தினர் தங்களது பண்டிகைகளின் போது தரும் பலகாரங்களை உண்ணலாமா? அவர்களுக்கு வாழ்த்து கூறலாமா?

மாற்று மதத்தினர் தங்களது பண்டிகைகளின் போது தரும் பலகாரங்களை உண்ணலாமா? அவர்களுக்கு வாழ்த்து கூறலாமா?

Written By STR Rahasiyam on Saturday, July 7, 2012 | 4:40 AM


பதில் :
ஆகுமான உணவுப் பொருட்களை மாற்று மதத்தினர் நமக்கு அளித்தால் அதை உண்பது தவறல்ல. எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் பயன்படுத்தக்கூடாது. சிலைகளுக்குப் படைத்த பொருட்களை பண்டிகைக் காலங்களிலோ அல்லது மற்ற காலங்களிலோ தந்தாலும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
தாமாகச் செத்தவைஇரத்தம்பன்றியின் இறைச்சிஅல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும்வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்;நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 16:115)
அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் "உஹில்ல'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.
எனவே பூஜை செய்து தரும் பொருட்கள்அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவைமது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை அவர்கள் தரும் போது வாங்கக் கூடாது. மற்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.
இது குறித்து நேரடி கேள்விகளுக்கும் பதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை வீடியோ வடிவில் காண
மேலும் பார்க்க
புபிற மதப் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லலாமா என்ற கேள்விக்கு முன்னரே பதில் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பார்க்கவும்  
மேலும் இதையும் பார்க்கவும்
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger