சீனாவில் துளிர்விடும் இஸ்லாம்
சீனாவில் இஸ்லாத்தை ஒடுக்க அந்த அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்து வந்த போதிலும் அல்லாஹ்வுடைய மகத்தான அருளால் பல்வேறு தடைகளைத் தாண்டி இஸ்லாம் அங்கு எழுச்சி பெற்று வருகின்றது.
சீன அரசாங்கம் முஸ்லிம்கள் நோன்பு பிடிப்பதற்குக்கூட பல கண்டிஷன்களைப் போட்டு அடக்குமுறை செய்து வரும் செய்திகளை சில வாரங்களாக ஊடகங்களில் கண்டு வருகின்றோம்.
முஸ்லிம்கள் உண்ணாமல் பருகாமல் இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது சீன அரசாங்கத்திற்கு எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு நோன்பு வைக்கக்கூட இவர்கள் தடைவிதித்த போதிலும் இஸ்லாம் அங்கும் எழுச்சி கண்டு வருகின்றது.
சீனாவிலுள்ள ஷான்க்காய் நகரத்தின் தென் மேற்குப் பகுதியான யீவு சிட்டி சீனர்கள் அதிகமாக இஸ்லாத்தைத் தழுவும் ஒரு பகுதியாக உள்ளது.
தற்போது அந்த நகரத்தில் 35,000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வசிக்கின்றனர்,
2000 ஆண்டு வாக்கில் இங்கு 100 முஸ்லிம்கள் தொழுகைக்காக ஒரு ஹோட்டல் ரூமை வாடகைக்கு எடுத்து தொழுது வந்தனர். தற்போது அங்கு மிகப்பெரிய பள்ளிவாசல் எழுப்பப்பட்டுள்ளது.
அந்த பள்ளியின் இமாம் ஐசின் கியொரொ அவ்குஆன் கூறுகையில் வரும் காலங்களில் நிச்சயம் இஸ்லாம் இந்த பகுதியில் வேகமாக வளரும் (இன்ஷா அல்லாஹ்) என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் செய்தி நேஷனல் ரிப்போர்ட்டர் என்ற பத்திரிக்கையில் வெளியிடப் பட்டுள்ளது.
நாத்திக நாடான சீனா 5 மதங்களை மட்டுமே அங்கீகரிக்கின்றது . புத்திஸம், இஸ்லாம், புரோட்டஸ்டன்ட், கத்தோலிக், தாவோஇஸம் ஆகிய 5 மதங்களையும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிபாடுகள் செய்ய அனுமதிக்கின்றது.
அதிகாரப்பூர்வமாக 22 மில்லியன் முஸ்லிம்கள் சீனாவில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சீனாவில் வசிக்கும் முஸ்லிம்களின் கணக்குப்படி 65 முதல் 100 மில்லியன் வரை முஸ்லிம்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அதாவது சீனாவில் 7.5 % முஸ்லிம்கள் வசிப்பதாக அங்குள்ள முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல் : tntj.net
Home »
இஸ்லாமிய எழுச்சி
» சீனாவில் துளிர்விடும் இஸ்லாம்
சீனாவில் துளிர்விடும் இஸ்லாம்
Written By STR Rahasiyam on Thursday, September 13, 2012 | 5:19 AM
Labels:
இஸ்லாமிய எழுச்சி
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
அலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா ? என்ற இக்கேள்விக்குப் பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா மு...
-
“யார் இந்த முஹம்மத் (ஸல்) ?” என்ற தலைப்பில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன்று நூல் ஒன்றை வெளியிட்டுள...
-
ஏக இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கப்பட்ட எமது ஜமாஅத்தின் கல்முனைக் கிளையின் புதிய நிர்வாகத்தேர்வு 16.07.2012 திங்கற்கிழமை இடம்பெற்றது...
-
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்கள் என்று அன்றைய எதிரிகள் விமர்சனம் செய்த போது அதை அல்லாஹ் மறுக்கிறான். இவ்வாறு கூறுவோர்...
-
Rasmin misc முஸ்லிம்களை சீண்டிய துப்பாக்கி வரிசையில் கமலின் விஸ்வரூபம். பொதுவாகவே சினிமாக்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் முஸ்லிம்க...
-
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு சம்மாந்துரையின் பிரபல வர்த்தகர் ஒருவர் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் சம்மாந்துறை கிளைக்கு ரூபா ஒன்றரை இலட்ச...
-
இன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர்கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். ந...
-
கட்டுரையாசிரியர் : பர்ளீன் M.I.Sc (மன்னார்) அபுதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் வாழ்க்கையையும் அதில் நாம் பெற வேண்டிய படிப்பினைகளைய...
-
(புகைப்பட உதவி-சியாட்) சம்மாந்துறையில் மல்கம்பிட்டி பிரேதேசத்தில் அமைந்துள்ள இந்த கபூர் ஸ்தானம் சில அறியாத மக்களினால் புனி...

0 comments:
Post a Comment