கண்டி மாநாகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சிக்காக ஆடு, மாடு முதலான மிருகங்களை அறுக்கக்கூடாது அவ்வாறு அறுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரும் பிரேரணை ஒன்று கண்டி மாநகர சபை மாதாந்தக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேறியது. எனினும் இரு அங்கத்தவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு இறைச்சிக்காக ஆடு, மாடுகளை வெட்டுவது கண்டி நிலையத்தை உடனடியாக மூடி அங்கு ஒரு மிருக வைத்திய நிலையம் ஒன்றினை அமைக்க வேண்டும் எனவும் அப்பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாநாகர சபையின் எதிர்க்கட்சித்தலைவரும் முன்னாள் கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமேயுமான ?????? விஜேரத்னவினால் முன் வைக்கப்பட்ட இப்பிரேரணை மீது அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, 145 ஆண்டுகளுக்கு முன்பு பௌத்த கேந்திரமான இக் கண்டி மாநகரில் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட ஆடு, மாடுகள் வெட்டும் பேராதனை வீதியில் அமைந்துள்ள சுதும் பொல நிலையத்தை உடனடியாக மூடி பௌத்த மதத்தின் சர்வதேச கேந்திரமாக விளங்கும் ஸ்ரீ தலதா மாளிகாவையை கொண்ட கண்டி மாநகரை புனிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். இப்பிரேரணை மீது உரையாற்றிய மாநகர சபை அங்கத்தவர் இலாஹி ஆப்தீன் (ஐ.தே.க) மற்றும் அஸ்மின் மரைக்கார் (ஸ்ரீ.ல.மு.கா) ஆகியோர் தமது எதிர்ப்பினை பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். |
Home »
» ஆடு, மாடுகளை இறைச்சிக்காக அறுக்க தடை
ஆடு, மாடுகளை இறைச்சிக்காக அறுக்க தடை
Written By STR Rahasiyam on Sunday, September 30, 2012 | 10:15 AM
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
உலகில் ஒருவர் எங்கிருந்தாலும் அவருடன் சுலமாக பேசும் வசதி இணையதளத்தில் உள்ளது. இதைப் பலர் முறைகேடாகப் பயன்படுத்தி வருகின்றனர். அந்...
-
57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு செவ்வாய்கிழமை சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் ஆரம்பமானது. இதில் ஈரான...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை கிளை சார்பாக 14.12.2012 அன்று இஷா தொழுகையை தொடர்ந்து சம்மாந்துறை சீயா சந்தியில் தெருமுனை பிரச்...
-
கட்டுரையாசிரியர் : பர்ளீன் M.I.Sc (மன்னார்) அபுதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் வாழ்க்கையையும் அதில் நாம் பெற வேண்டிய படிப்பினைகளைய...
-
தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம் . حدثنا...
-
காத்தான்குடியில் 3.8.1990ல் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆ பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனிய்யா பள்ளிவாயல் ஆகிய இரண்டு பள்ளிவாயல்களில் ...
-
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கம...
-
ஜனனமும் கல்வியும்: பீர் முஹம்மது, மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், பத்தாம் திகதி இராமநாதபுரம்...
-
Charlie Hebdo என்ற ஃபிரன்ச் பத்தரிக்கை நேற்று (19-9-2012) நபிகள் நாயகத்தின் நிர்வாண கார்ட்டூனை தனது பத்திரிக்கையில் வெளியிடுள்ளது. நபிகள்...
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள மலசலகூடங்களில் அரபு எழுத்தனி கொண்ட மாபில்கள் பதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி இன்போ வாசகர் ஒருவர் எ...

0 comments:
Post a Comment