கண்டி மாநாகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இறைச்சிக்காக ஆடு, மாடு முதலான மிருகங்களை அறுக்கக்கூடாது அவ்வாறு அறுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரும் பிரேரணை ஒன்று கண்டி மாநகர சபை மாதாந்தக்கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேறியது. எனினும் இரு அங்கத்தவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு இறைச்சிக்காக ஆடு, மாடுகளை வெட்டுவது கண்டி நிலையத்தை உடனடியாக மூடி அங்கு ஒரு மிருக வைத்திய நிலையம் ஒன்றினை அமைக்க வேண்டும் எனவும் அப்பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாநாகர சபையின் எதிர்க்கட்சித்தலைவரும் முன்னாள் கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமேயுமான ?????? விஜேரத்னவினால் முன் வைக்கப்பட்ட இப்பிரேரணை மீது அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, 145 ஆண்டுகளுக்கு முன்பு பௌத்த கேந்திரமான இக் கண்டி மாநகரில் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட ஆடு, மாடுகள் வெட்டும் பேராதனை வீதியில் அமைந்துள்ள சுதும் பொல நிலையத்தை உடனடியாக மூடி பௌத்த மதத்தின் சர்வதேச கேந்திரமாக விளங்கும் ஸ்ரீ தலதா மாளிகாவையை கொண்ட கண்டி மாநகரை புனிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். இப்பிரேரணை மீது உரையாற்றிய மாநகர சபை அங்கத்தவர் இலாஹி ஆப்தீன் (ஐ.தே.க) மற்றும் அஸ்மின் மரைக்கார் (ஸ்ரீ.ல.மு.கா) ஆகியோர் தமது எதிர்ப்பினை பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். |
Home »
» ஆடு, மாடுகளை இறைச்சிக்காக அறுக்க தடை
ஆடு, மாடுகளை இறைச்சிக்காக அறுக்க தடை
Written By STR Rahasiyam on Sunday, September 30, 2012 | 10:15 AM
Subscribe to:
Post Comments (Atom)
இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை
-
கடந்த எட்டாம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு...
-
தர்காக்களில் நடப்பது என்ன? – முன்னோட்ட காட்சி! தர்காக்களில் நடப்பது என்ன? – ஒரு புலனாய்வு ரிப்போர்ட்! காணத்தவறாதீர்கள்! 60அடி பாவா, 45 அடி ...
-
JM சோமாலியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஹசன் முகமது புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக பேராசியரான 56 வயது ஹசன் பற்றி...
-
இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தால் கொந்தளித்த முஸ்லிம்கள் ...
-
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்பிடி கிளையினால் ஸகாதுல் ஃபித்ர் ஊர் மக்ளிடம் வசூலிக்கப்பட்டு கல்பிடி பிரதேசத்தில் வசிக்கும் 100 ஏழைக் குடும்பங்...
-
JM இலங்கையின் லக்பிம பத்திரிகை தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சித்தரித்து கார்டூன் ஒன்றை வெளியிட்ட...
-
JM லிபியாவில் நடந்த ராக்கெட் குண்டு தாக்குதலில் அமெரிக்க தூதர் உள்பட மூன்று பேர் பலியாயினர். லிபியாவின் அதிபர் கடாபி ஆட்சி அகற்றப்பட்ட ப...
-
Rasmin m.i.sc நபியவர்களை கேவலப்படுத்தி அமெரிக்கர்களினால் தயாரிக்கப்பட்ட வீடியோ காட்சியின் புகைப்படங்களை தினக்குரல் பத்திரிக்கை கடந்த ...
-
பதில் அந்நியப் பெண்களை அழைத்துச் செல்வது கூடாது என்பது தெளிவானதாகும். உங்கள் மனைவியாக அல்லது திருமணம் முடிக்க தடுக்கப்பட்ட தாய் மகள...

0 comments:
Post a Comment