Home » » சாக்லேட் பிரியர்களுக்கு எச்சரிக்கை

சாக்லேட் பிரியர்களுக்கு எச்சரிக்கை

Written By STR Rahasiyam on Thursday, September 27, 2012 | 12:51 PM

லண்டன் - அதிகமாக சாக்லேட் சாப்பிடுபவர்கள் போதை மருந்து உட்கொண்டவர் போன்ற நிலையினை அடைவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மிசிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் எலிகளை பயன்படுத்தி சாக்லேட் சம்பந்தமான ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் அவர்கள் வெளியிட்டுள்ள தகவல் சாக்லேட் பிரியர்களுக்கு அதிர்ச்சியினை அளித்துள்ளது. ஓபியம் என்ற போதை மருந்தினை சாப்பிடுபவர் போன்ற நிலையினை அதிகளவில் சாக்லேட் சாப்பிடுபவர்கள் அடைவர் என இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

நமது மூளையில் உள்ள என்கெப்லின் என்ற ரசாயனத்திரவம் சாக்லேட் சாப்பிடும்போது இரண்டு மடங்கு சுரக்க ஆரம்பிக்கிறது. இது உணர்வு நரம்புகளை செயலிழக்கச் செய்யும் அபாயம் உள்ளது. ஓபியத்தில் உள்ள லன்டோர்பின் என்ற ரசாயனமும் இவ்வாறான நிலையை ஏற்படுத்தித்தான் போதையை ஏற்படுத்துகிறது. 

எனவே சாக்லேட் பிரியர்களே - அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.மூலம் இதை உறுதி செய்துள்ளனர்.
Share this article :

0 comments:

Post a Comment


உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger