?max-results=10">Featured Today');

Text Widget

மனிதன் என்ற அடிப்படையில் எமது தளத்தில் உள்ள கட்டுரைகள் , ஒலி வடிவங்களில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். அதனை காண்பவர்கள் குர்ஆன், ஹதீஸ் வரிகளுடன் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.infostrfn@gmail.com

பார்வையாளர் எண்ணிக்கை

வாசகர்களின் கவனத்துக்கு

இது அல்-குர்ஆன் அல்-ஹதீஸ் மூலமாக இஸ்லாத்தை அதன் தூயவடிவில் வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட இணையதளமாகும். இதில் ஏதும் பிழைகள் ஏற்பட்டால் சுட்டிக்காட்டவும்.இந்த இணைய தளத்தை மேம்படுத்துவதர்க்கான உங்களது ஆலோசனைகளையும் வழங்கவும். email- infostrfn@gmail.com
STRFN Logo

நாணயமாற்றி (கீழே தெரிவு செய்யவும்)

Cricket Live

திருக்குர்ஆன்

உலக மொழியியல் STRFN

திருக்குர்ஆன் தமிழாக்கம் பீ.ஜே

திருக்குர்ஆன் தமிழாக்கம் பீ.ஜே

உங்களும் இங்கு இணையுங்கள்.

படியுங்கள்!.. பலனடையுங்கள்!..

இந்த இணையதளத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து மார்க்க பணிக்கு உதவுங்கள். www.strfn.blogspot.com

பதிவுகள் மாத வாரியாக

Blogger Templates

Blogger Tutorials

Latest Post

Showing posts with label மார்க்க விளக்கம். Show all posts
Showing posts with label மார்க்க விளக்கம். Show all posts

அடக்கு முறைக்கு அஞ்சாத அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள்.

Written By STR Rahasiyam on Thursday, December 6, 2012 | 10:36 AM


கட்டுரையாசிரியர் : பர்ளீன் M.I.Sc (மன்னார்)
அபுதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் வாழ்க்கையையும் அதில் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் அறிவோம்.அபுதர் அல் கிப்பாரி (ரலி) பற்றி ஓர் அறிமுகம்பெயர் : ஜுன்துப் இப்னு ஜுனாதாத் இப்னு சுப்யான் இப்னு உபைத் இப்னு ஹராம் இப்னு கிப்பார் இப்னு முலைல் இப்னு லம்hரா இப்னு பக்ர் இப்னு அப்து மனாத் இப்னு கினானா என்பதாகும்.
இவரது புனைப் பெயர் அபு தர் என்பதாகும்.மேலும் இவர் அல் கிப்பார் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். தந்தையின் பெயர் :
ஜுனாதாத் இப்னு சுப்யான்தாயின் பெயர் : ரம்லத் பின்து வகீஆ ரலி அவர்கள்மனைவியின் பெயர் : உம்மு தர் ரலி அவர்கள் சகோதரரின் பெயர் :     உனைஸ் இப்னு ஜுனாதா ரலி அவர்கள்ஆதாரம் :     அஹ்மத் .சீரத்து அஃலாமுன் நுபலா.
இஸ்லாத்தை தழுவிய அபுதர்ரும் குடும்பத்தாரும்.இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக வேண்டி தனது ஊரிலிருந்து மக்கா நகரிற்கு வந்து சில நாட்கள் அங்கு தங்கியிருந்தார்கள்.பிறகு இரகசியமாக முஹம்மது நபி அவர்கள் இருக்கும் இடத்தை விசாரித்து அங்கு சென்று இஸ்லாத்தை தழுவினார்கள்.அபுதர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை தழுவிய போது மக்காவில் யாராவது இஸ்லாத்தை தழுவியதாக கூறினால் உடனே விசாரனையில்லாமல் அடிக்கக்கூடியவர்களாக மக்கத்துக் காபிர்கள் இருந்தார்கள்.அப்படியான நிலை இருந்தும் இஸ்லாத்தை தழுவியவுடனே பகிரங்கமாக இஸ்லாத்தை வெளிப்படுத்திய ஒரு உண்மைக் கொள்கைவாதியாவார். இதைப் பின் வரும் ஹதீஸ் சொல்கிறது.
அபூ ஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:எங்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்க, நாங்கள் “சரி (அறிவியுங்கள்)” என்றோம். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அப+தர் (ரலி) அவர்கள் (என்னிடம்) சொன்னார்கள்: நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது “ஒரு மனிதர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்” என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே நான் என் சகோதரர்(அனீஸ்)இடம், “நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரது செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு  வா” என்று  சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், “உன்னிடம்  என்ன செய்தி உண்டு?”  என்று கேட்டேன். “நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கின்ற ஒரு மனிதராக நான் அவரைக் கண்டேன்” என்றார். நான் அவரிடம், “போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை” என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன்.அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்ப வில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம்ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ (ரலி) அவர்கள் (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார்கள். (என்னைக் கண்டதும்), “ஆள் (ஊருக்குப்) புதியவர் போலத் தெரிகிறதே” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்றேன். உடனே அவர்கள், “அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)” என்று சொன்னார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும்  (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ (ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். “மனிதர் (தான் தங்க வேண்டியுள்ள) தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?” என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். உடனே அலீ (ரலி) அவர்கள், “என்னுடன் நடங்கள்” என்று சொல்லிவிட்டு, “உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்” என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், “அவ்வாறே செய்கிறேன்” என்று சொன்னார்கள். நான் அப்போது “இங்கே தம்மை இறைத் தூதர் என்று வாதிட்டபடி ஒரு மனிதர் புறப்பட்டிருக்கிறார்” என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே, நான் என் சகோதரரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. ஆகவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். ஆகவே என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில்,  (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகின்ற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவரோரமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்” என்று சொன்னார்கள். இறுதியில் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, நானும் அவர்களுடன் உள்ளே சென்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம், “எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்” என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப+தர்ரே! (நீ இஸ்லாத்தை  ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கி விட்ட செய்தி உனக்கு எட்டும் போது எங்களை நோக்கி வா” என்று சொன்னார்கள். அதற்கு நான், “உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக் கிடையே உரக்கச் சொல்வேன்” என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர். நான், “குறைஷிக் குலத்தாரே! “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை” என்று நான் உறுதி கூறுகின்றேன். “முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்” என்றும் நான் உறுதி கூறுகின்றேன்” என்று சொன்னேன். உடனே, அவர்கள் “இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று சொன்னார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை அடையாளம் புரிந்துகொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?) என்று கேட்டார்கள். உடனே அவர்கள் என்னை விட்டு விலகிவிட்டார்கள். மறு நாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போலவே சொன்னேன். அவர்கள், “இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்” என்று சொன்னார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போலவே நடந்து கொண் டார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடி படாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போலவே (அன்றும்) சொன்னார்கள் -இதை அறிவித்த பிறகு- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “இது அப+தர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அப+தருக்கு கருணை காட்டுவானாக!” என்று சொன்னார்கள்.
(நூல் : புகாரி – 3522.)
அபுதர் ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது மட்டுமல்லாமல் தனது குடும்பத்தாருக்கும் ஊராருக்கும்  இஸ்லாத்தைப் பற்றிக் கூறி அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.என்பதை பின் வரும் நபி மொழி கூறுகின்றது.
நான் (என் சகோதரர்) உனைஸிடம் திரும்பிச் சென்றேன். அப்போது உனைஸ் “நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார். “நான் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்பினேன்” என்று கூறினேன். உனைஸ், “(நீங்கள் ஏற்றுள்ள) உமது மார்க்கத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்புகிறேன்” என்று கூறினார்.பிறகு நாங்கள் எங்கள் தாயாரிடம் சென்றோம். (நாங்கள் இஸ்லாத்தைத் தழுவிய விவரத்தைக் கூறினோம்.) அப்போது என் தாயார், “(நீங்கள் இருவரும் ஏற்றுள்ள) உங்கள் மார்க்கத்தைப் புறக் கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தைத் தழுவி, (அதை) உண்மையென நம்புகிறேன்” என்று கூறினார்.பிறகு நாங்கள் எங்கள் வாகனத்தில் ஏறி எங்கள் “கிஃபார்” குலத்தாரைச் சென்றடைந்தோம். அவர்களில் பாதிப்பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு அய்மா பின் ரஹளா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் முன்னின்று தொழுகை நடத்தினார்@ அவரே அம்மக்களுக்குத் தலைவராக இருந்தார்.ஃகிஃபார் குலத்தாரில் இன்னும் பாதிப்பேர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வரும்போது நாங்கள் இஸ்லாத்தை ஏற்போம்” என்று கூறினர். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, எஞ்சியிருந்த பாதிப்பேரும் இஸ்லாத்தை ஏற்றனர்.“அஸ்லம்” குலத்தார் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்று, “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சகோதரக் குலத்தார் எந்த அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண் டார்களோ அதே அடிப்படையில் நாங்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம்” என்று கூறினர்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(பெயருக்கேற்பவே) ஃகிஃபார்” குலத்தாரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் “அஸ்லம்” குலத்தாரைப் பாதுகாப்புப் பெற்ற வர்களாக ஆக்கிவிட்டான்” என்று கூறினார்கள்.
(நூல் : முஸ்லிம் – 4878.)
நபிகளாரின் உபதேசத்தை பெற்ற நபித் தோழர்நபித் தோழர்கள் தவறு செய்யும் போது நபிகளாரின்  உபதேசத்தைப் பெற்ற நபித் தோழர்கள் ஏராளம் இருக்கின்றனர்.அவ்வாறு நபிகளாரின் உபதேசத்தைப் பெற்றவர் தான் அபுதர் (ரலி) அவர்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபுதர் (ரலி) அவர்களுக்கு தான் விரும்புவதையே  தனக்கும் விரும்புகிறேன் என்கின்ற அளவிற்கு உபதேசம் செய்ததை பின் வரும் நபி மொழிகள் கூறுகின்றது.
அபூதர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:நான் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ் வின் தூதரே! எனக்கு ஏதேனும் பதவி வழங்கக் கூடாதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, “அபூதர்! நீர் பலவீனமானவர். அது ஒரு அமானத் ஆகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறை வேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்” என்று கூறினார்கள்.
(நூல் : முஸ்லிம் – 3729.)
அபூதர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அபூதர்! உம்மை நான் பலவீன மானவராகவே காண்கிறேன். எனக்கு நான் விரும்புவதையே உமக்கும் விரும்புகிறேன். இருவருக்குக்கூட நீர் தலைமை ஏற்காதீர். அநாதையின் சொத்துக்கு நீர் பொறுப்பேற்காதீர்” என்று சொன்னார்கள்.
(நூல் : முஸ்லிம் – 3730)
நிறைவான மார்க்க அறிவு பெற்றவர்.அபுதர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு இருந்து மார்க்க விசயங்களைப் பற்றி அதிகமாக கேள்வி கேட்டு தெரிந்து கொண்டார்கள்.இதற்கு ஏராளமான நபி மொழிகள் இருக்கின்றன.ஆகவே இவைகளை படிப்பதோடு நிறுத்திவிடாமல் நாமும் மார்க்க விசயங்களை அதிகமாக அறிந்து அபுதர் அவர்களைப் போன்று நிறைவான மார்க்கமுடையவராவோம்.
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” என்று கேட்டார்கள்
(நூல் : முஸ்லிம் – 291.)
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவதுநான் நபி (ஸல்) அவர்களிடம், “எந்த நற்செயல் சிறந்தது? என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.  நான், “எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், “அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும்  (தான் சிறந்தவர்கள்)” என்று பதிலளித்தார்கள்.  நான், “என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?” என்று கேட்டேன்.  நபி (ஸல்) அவர்கள் “பல வீனருக்கு உதவி செய் அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்” என்று கூறினார்கள்.  நான் “இதுவும் என்னால் இயலவில்லை யென்றால்….?” என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், “மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்” என்று கூறினார்கள்.நூல் : புகாரி – 2518.அப+தர் (ரலி) அவர்கள் கூறியதாவதுநான் (நபி ஸல் அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! ப+மியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பளளி;வாசல் எது? என்று கேட்டேன். அவர்கள், “அல் மஸ்ஜிதுல் ஹராம்-மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள், “(ஜெரூஸலத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், “அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடை வெளி) இருந்தது” என்று கேட்டேன். அவர்கள், “நாற்பதாண்டுகள்” (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப் பட்டது) பிறகு, “நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில்தான் சிறப்பு உள்ளது” என்று சொன்னார்கள்.
(நூல் : புகாரி – 3366)

தொ(ல்)லைக் காட்சியின் விபரீதங்கள். ஒரு அலசல்


ஆக்கம் : ரஸ்மின் M.I.Sc

இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரினதும் பொழுது போக்கு அம்சமாக எது திகழ்கிறது என்றொரு கேள்வியைக் கேட்டால் டி.வி பார்த்தல் என்ற பதில்தான் அவசரமாக கிடைக்கும்.

புத்தகம் வாசித்தல், குர்ஆன் ஓதுதல், பாடப் புத்தகங்களைப் படித்தல், நல்ல கட்டுரைகளை எழுதுதல், படித்துக் கொடுத்தல், தாய், தந்தைக்கு உதவுதல், தெரிந்தவர்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்லிக் கொடுத்தல் போன்ற செயல்பாடுகளை பொழுது போக்காக்க் கொண்டவர்கள் மிகச் சிலர் தான் இருக்கிறார்கள்.
வாழ்வில் முன்னேர வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலரின் மனதில் ஊசலாடுகிறது. ஆனால் அந்த எண்ணத்தை செயல்படுத்தும் முறைதான் அவர்களுக்குத் தெரியவில்லை. இல்லையில்லை தெரிந்து கொள்ள ஆசைப்படவில்லை.
உலக வரலாற்றில் வெற்றிக் கொடி நாட்டிய எத்தனையோ தலைவர்கள் தங்கள் பொழுது போக்காக எதையும் நினைக்கவில்லை வாழ்க்கை வழிமுறையாக அனைத்தையும் நினைத்து அதன் படி தங்களுக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைக் கூட வெற்றிப் பாதையின் வழிகாட்டிகளாகப் பயண்படுத்திக் கொண்டார்கள்.
உலகின் வெற்றிப் பாதையில் யாரும் காண முடியாத அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்து அவர்களுக்கு நேர் வழி காட்டி உலகின் கேடு கெட்ட சமுதாயமாக இருந்தவர்களை மனிதப் புனிதர்களாக மாற்றிய நபி பெருமானார் (ஸல்) அவர்கள், இந்த ஓய்வு நேரம் அதனைப் பயன்படுத்துவதின் முக்கியத்துவம் போன்றவற்றைப் பற்றி மிக அழகான முறையில் ஒரு வரியில் விளக்கிக் கூறுகிறார்கள்.

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர்.

1. ஆரோக்கியம்.
2. ஓய்வு நேரம்.
(புகாரி 6412)

ஓய்வு நேரத்தைப் பயண்படுத்துவதின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த அளவுக்கு தெளிவாக எந்த மனிதரும் சொல்லியிருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள்.
உலகை ஒரு பொழுதைக் கழிக்கும் காட்சியறையாக நினைத்து வாழும் இன்றைய நவீன மனிதர்கள் தங்கள் நேரங்களில் அதிகமானவற்றை வீன் கேளிக்கைகளுக்காகவே செலவு செய்கிறார்கள். அதிலும் அதிகமானவர்கள் தொலைக்காட்சிக்கு முன் உட்கார்ந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உலகின் வழிகாட்டியான இஸ்லாம் தொலைக்காட்சிப் பெட்டி என்ற இந்த அரிய கண்டு பிடிப்புக்கு மற்ற மார்க்கங்கள் கொடுக்காத ஒரு முக்கிய முன்னுரிமையைக் கொடுக்கிறது. பிரயோஜனமான செய்திகள், கருத்துக்கள், ஆரோக்கியமான தகவல்கள் என்று சிறந்த பல செய்திகள் அதில் ஒளி, ஒலி பரப்பப்படுகிறது. அந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதை இஸ்லாம் எந்த நேரத்திலும் தடை செய்யவில்லை.
ஆனால் இன்று நாம் நமது சமுதாயத்திற்கும், நமக்கும் எது ஆரோக்கியமான செய்தியோ அதைத் தவிர்த்து விட்டு அதுவல்லாத மற்ற அனைத்து விஷயங்களுக்காகவும் நமது நேரத்தை வீனாக்கிக் கொண்டிருக்கிறோம்.
இப்படி வீனான தொலைக் காட்சித் தொடர்கள், சினிமாக் கூத்தாட்டங்கள் பாடல் காட்சிகள், வக்கிர நடனங்கள், ஆபாசப் பேச்சுக்கள், கபடம் நிறைந்த வார்தைகள் என்பவற்றைப் பார்ப்பதினால் நமது வாழ்வில் நமது எண்ணத்தில், நடை முறையில் பல்வேறான கெட்ட சிந்தனைகள், நடவடிக்கைகள் தோற்றம் பெருவதை இன்றை நவீன உலக ஆராய்ச்சிகள் தினமும் நிரூபிக்கின்றன.
தொலைக் காட்சி பார்ப்பதின் நமக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள்.

தொலைக் காட்சிக் கதையும், தனிமை போன்ற உணர்வும்.

சில தொலைகாட்சி நிகழ்சிகளிலும் ,படங்களிலும் வருகிற கதாபாத்திரங்கள் சில பிரச்சனைகளில் சிக்குண்டு இருப்பது போல காட்டுவார்கள். அத்துடன் வாழ்க்கையில் வெற்றி பெற தவறியவர்கள் சமூகத்தில் இருந்து விலகி தனியாக வாழ்வது போல காட்டுவார்கள்.
படமாக இருந்ததால் 02 மணி நேரத்திற்குள் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். அனால் இதுவே தொடர் நாடகங்களாக இருந்ததால் 02 வருடங்களுக்கு பின்  நாடகம் முடியும் போதே பிரச்சனைகளில் இருந்து விடுபடுவது போல காட்டுவார்கள்.
இவ்வாறான படங்களயும், நாடகங்களையும் தொடர்ச்சியாக சிறுவர்கள் பார்க்கும் போது  நடிக, நடிகைககளை ரோல் மாடல்களாக நினைத்துப் பின்பற்றி இவர்களும் பிரச்சனைகளில் மாட்டுபட்டு தனியாக வாழ்வது போல உணர்ந்து தப்பான முடிவுகளை எடுக்கிறார்கள். காலப்போக்கில் மனிதர்களோடு பழகாமல் உயிர் அற்ற பொருட்களுடன் அல்லது விளையாட்டுப் பொருட்களுன் பேசிப் பேசி காலத்தைக் கழிக்கும் அவல நிலையில் தள்ளப்படுகிறார்கள்.
நம்மை அறியாமல் நமக்குள் தோன்றும் முரட்டுத்தனம்.

தொலைக் காட்சிகளினால் நமக்கு ஏற்படும் பாதிப்புக்களில் மிக முக்கிய இடத்தை பெருவது முரட்டுத் தன்மையாகும். சினிமாப் படங்களில், தொலைக்காட்சிகளில் காட்டப்படும் சண்டைக் காட்சிகள், கொலைகள் போன்றவற்றைப் பார்ப்பதினால் சிறு வயது முதலே குழந்தைகள் மனதில் முரட்டுக் காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்து சினிமாவின் காட்சி நிஜ வாழ்க்கையின் வரையரையாக மாறிவிடுகிறது.
ஒருவர் 20 வயதை அடையும் போது ஏறக்குறைய 200000  சண்டை காட்சிகளையும், 50000 கொலைகளையும்  தொலைகாட்சிகளில் பார்ப்பதற்கான சாத்தியகூறுகளும் சில இடங்களில் காணப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அண்மையில் குறிப்பாக சிறுவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, 1- 3 மணித்தியாலங்கள்வரை தொலைகாட்சி பார்க்கும், 22 .5 % ஆன சிறுவர்கள் தனது சக தோழர்களுடன், மற்றவர்களுடன் சண்டையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
05 மணித்தியாலங்களிற்கு மேல் பார்க்கும் போது  இந்த 22.5 % என்பது 28 .8 %க்கு உயர்வடைகிறது. இருந்தாலும் 01 மணித்தியாலத்திற்கும்  குறைவாக தொலைகாட்சி பார்க்கும் 5.7 % ஆன சிறுவர்களும் தப்பான நடவடிக்கைகளில்ஈடுபடுகிறார்கள்.
வீடுகளில் பெற்றோருக்கு மத்தியில் நடக்கும் சண்டைகளும் இதற்கு ஒரு காரணியாகச் சொல்லப் படுவது மேலதிக தகவல்.
செயல்பாடுகளில் சரியான கவணம் செலுத்த முடியாமை.

சிறுவர்களை கவர்வதற்காக சிறுவர் தொலைகாட்சிகளும், சிறுவர் நிகழ்சிகளும் மிகவும் வேகமாக இடம் பிடித்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஒளி, ஒலி பரப்ப்ப்படும் போது  நிறங்கள் அதிகமானதாகவும்,மிகவும் வெளிச்சம் அதிமானதாகவும் காட்டப்படும். காலப்போக்கில் சிறுவர்கள் இந்த தொலைக் காட்சிகளின் ஒளி பரப்பு வேகத்திற்கு இயல்படைந்து விடுகிறார்கள்.
இதனால் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தும் போது அந்தப் பாடங்களை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணமும்,சுறுங்கிய கவனமும் மாணவர்கள் மத்தியில் குடிகொள்ள ஆரம்பிக்கிறது.
சிறுவர்கள் அதிக நேரம் பாடங்களில் கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள்.
டி.வி. பார்த்தல் கேம்கள் விளையாடுதல் போன்றவை பற்றிய ஆராய்சியில் ஒரு நாளைக்கு 02 மணி நேரங்கள்  சிறுவர்களுக்கு TV பார்க்கவும், கேம்ஸ்களை விளையாடவும் கொடுத்து பரிசீலனை செய்த போது சிறிது நாட்களின் பின்னர் குறிப்பிட்ட சிறார்கள் பாடங்களில் கவணம் செலுத்த சிறமப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
கனவில் கூட இன்பம் இல்லை.

50 பேரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி   ,தாம் காணும் கனவுகளை பற்றிய செய்திகளை குறித்து வைக்க கூறி உள்ளார்கள். (இவர்களில் பாதிபேர் 25வயதுக்கு உட்பட்டவர்கள், பாதிபேர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள்) இறுதியில் தாம் கண்ட கணவுகள் தொடர்பாக அவர்கள் தெரிவித்த பதில் ஆச்சரியத்தை ஊட்டியது.
இறுதி முடிவை பார்த்த போது 25 வயதுக்கு உட்பட்டவர்களில் அநேகமானோர்  கண்டகனவுகள் பல  வண்ண நிறங்களாக  தோன்றி உள்ளது. 55 வயதுக்கு மேற்பட்டவர்களில்அநேகமானோர்  கண்ட கனவுகள் கருப்பு வெள்ளையில் தெரிந்துள்ளது. 55 வயதுக்கு மேற் பட்டவர்கள் அந்த காலத்தில் கருப்பு வெள்ளை தொலைகாட்சியை பார்த்தமையேஇதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அறியாத வயதும் தெரியாமல் செய்யும் தவறும்.

தங்கள் குழந்தைகள் கொஞ்சம் எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் அவர்களின் சேட்டைகள், குறும்புத் தனங்களும் கூடவே சேர்ந்து ஆட்டம் காட்ட ஆரம்பிக்கும். தாய் வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக அல்லது நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காக தனது குழந்தைக்கு தொலைக் காட்டியை போட்டுக் காட்சிப்படுத்துகிறாள்.
பொம்மைப் படங்கள், சிறுவர் நடணங்கள், பேய்களின் (?) பெயரால் உருவாக்கப்படும் கதைகள் என்று தொடங்கி கட்டியணைத்து குத்தாட்டம் போடும் சினிமாப் பாடல்கள் வரை அந்தக் குழந்தைக் குறைவின்றி பார்த்து ரசிக்கும் நிலையை தாயே தாரைவார்த்துக் கொடுக்கிறாள்.
இதனால் தனது குழந்தையின் வாழ்வில் எதிர்காலத்தில் என்ன மாற்றம் நிகழப் போகிறது? என்ன விபரீத்த்தைக் குழந்தை அடைந்து கொள்ளப் போகிறது என்பதை தாய் சிந்திக்க மறுக்கிறாள்.
குழந்தை அறியாத வயதில் தெரியமால் செய்யும் தவறுக்கு துணை நிற்கும் தாயின் செயல்பாட்டால் பிள்ளையின் கவணம் திசை திருப்பப் பட்டு ஒரு குறுகிய வட்டத்திற்குள் பிள்ளையின் சிந்தனை கொண்டு வந்து நிறுத்தப் படுகிறது.
பிறந்து 29 மாதங்களே ஆன குழந்தைகளிடம் நடந்த ஆராய்ச்சியின் போது,அதிகம் TV பார்த்த குழந்தைகள் எதிர் காலத்தில் பாடங்களில் குறைவான மதிப்பெண்களை பெற்றுக் கொள்வதுடன்,  வகுப்பறைகளில்  சுறுசுறுப்பு அற்றுப் போய் சோம்பேரித் தனத்துடன் காணப்படுகிறார்கள்.
பிரான்ஸ் நாட்டில் 3 வயதுக்கு குறைவான குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது என்பது மேலதிக தகவல்.
தொலைக் காட்சி ரசனையும், உடல் பருமனும்.

எந்த வேலைகளிலும் ஈடுபடாமல் தொடர்நது தொலைக் காட்சி பார்த்துக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் இருப்பவர்களுக்கு உடலில பெருகும் கலோரிகள் நிலை பெற்று உடல் பருமன் அசுர வேகத்தில் பெருக ஆரம்பிப்பதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நடத்தப்பட்ட ஆராச்சியில் தொலைக் காட்சியை குறைவாக பார்த்தவர்கள் தினம் 5 மணி நேரங்கள் வரை பார்த்தவர்களை விட 120 கலோரிகளை தங்கள் உடம்பில் இருந்து இல்லாமலாக்குகிறார்கள்.
தினமும் 5 மணி நேரங்கள் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்கள் ஒரு நாளைக்கு 120 கலோரிகள் கொழுப்பை தங்கள் உடம்பில் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள்.
அன்பின் சகோதரர்களே ! தாய் மார்களே ! பெற்றோர்களே !
சினிமாவின் சீர் கேட்டைத் தவிர்ப்போம். தொல்லைக் காட்சியான தொலைக் காட்டியை நல்லதுக்கு மாத்திரம் பயண்படுத்துவோம். என்ற கோரிக்கையை அன்பாக உங்களிடம் முன்வைக்கிறோம்

கபுராளிகள் தினம் கற்பனையாக உருவாக்கப்பட்டதே!


இல்லாத பெயரில் பொல்லாத பித்அத்கள்.

கட்டுரை ஆசிரியர் RASMIN M.I.Sc
அன்னையர் தினம், முதியோர் தினம், ஆசிரியர் தினம், என்று பல விதமான தினங்களை இன்று மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த தொடரில் நமக்கும் காலத்திற்குக் காலம் ஏதாவது சில தினங்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மத குருமார்கள் சிலர், நபியவர்களின் பிறந்த தினம், நபியவர்கள் மிஃராஜ் சென்ற தினம், என்று பல வகையான மார்க்கத்தில் இல்லாத கொண்டாட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவற்றையும் மார்க்கம் என்ற பெயரில் காலா காலமாக அரங்கேற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் ஷஃபான் மாதம் 15ம் நாளை கபுராளிகள் தினம் (பராஅத் இரவு) என்று உருவாக்கி அதனை வெகு விமர்சையாக முஸ்லீம்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த கபுராளிகள் தினம் என்பது மார்க்கத்தில் உள்ளதா? நபியவர்கள் இதனை காட்டித் தந்தார்களா? கபுராளிகள் தினம் கொண்டாடுவதினால் நமக்கு ஏதும் நன்மை உண்டா? மரணித்தவர்களுக்கு ஏதும் நன்மை ஏற்படுமா என்பதையெல்லாம் மிகத் தெளிவாக விளக்குவதற்காகவே இந்த ஆக்கம் எழுதப்படுகிறது.

நபியவர்கள் காட்டித்தராதவை மார்க்கமாக முடியாது.

இஸ்லாமிய மார்க்கத்தில் எதையாவது ஒன்றை இபாதத்தாக (வணக்கமாக) செய்ய வேண்டும் என்றால் அந்த வணக்கம் அல்லாஹ்வினாலும் அவனுடைய தூதரினாலும் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். எந்த வணக்கத்திற்கு இந்த அங்கீகாரம் இல்லையோ அந்த வணக்கம் இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நிராகரிக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 2697

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

நூல்: முஸ்லிம் 3243

ஆக நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கு இஸ்லாமிய அனுமதியுண்டா என்று பார்ப்பது முதல் கடமை. கபுராளிகள் தினம் என்று இன்றைக்கு கொண்டாடப்படும் தினத்திற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அப்படி ஒரு இரவை அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ காட்டித் தரவும் இல்லை.
கபுராளிகள் தினம் கொண்டாடக் கூடாது, கொண்டாடுவது பாவமான காரியம் என்பதற்கு இந்த அளவுகோளே போதுமானதாகும்.
கபுராளிகள் தினம் எதற்காக ? எப்படி ?

இல்லாத பெயரில் பொல்லாத பித்அத்.

கபுராளிகள் தினம் என்று கொண்டாடப்படும் ஷஃபான் 15ம் இரவுக்கு பராஅத் இரவு என்று சொல்லுவார்கள். இந்த பராஅத் இரவில பல விதமான மார்க்கத்திற்கு முரனான காரியங்களும் அரங்கேற்றம் செய்யப்படும். உண்மையில் இவர்கள் சொல்லிக் கொள்ளும் பராஅத் இரவு என்றொன்று மார்க்கதில் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை.
குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் லைலதுல் கத்ர் (கத்ருடைய இரவு) என்ற வாசகம் இருக்கிறது. ஆனால் லைலதுல் பராத் என்றொரு வார்த்தை குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ எங்குமே காணப்படவில்லை. காரணம் இஸ்லாமிய மார்க்கதில் அப்படியொரு முக்கியத்துவம் மிக்க இரவு இல்லை.
ஆனால் ஷபே பராஅத் என்று ஷஃபான் மாதம் 15ம் நாளை கண்ணியப்படுத்துபவர்கள் பேர் வைத்துள்ளார்கள். ஷபே என்றால் பாரசீக மொழியில் இரவு என்று அர்த்தம். பராஅத் என்ற வார்த்தையுடன் ஷபே என்பதை சேர்த்து ஷபே பராஅத் (பாராத் இரவு) என்றாக்கி விட்டார்கள்.
பாரசீக மொழியில் இந்த நாள் அழைக்கப்படுவதில் இருந்தே கண்டிப்பாக இந்த பித்அத் (மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட செயல்) ஈரானில் (பாரசீகம்) இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மூன்று யாசீன்களும், மூட நம்பிக்கைகளும்.

ஷஃபான் மாதம் 15ம் நாள் கொண்டாடப்படும் கபுராளிகள் தினத்தில் சில காரியங்கள் செய்யப்படும். அதில் மிக முக்கியமாக மூன்று யாசீன்கள் ஓதுவார்கள்.
முதல் யாசீன் பாவ மன்னிப்பிற்காகவும்.
இரண்டாவது யாசீன் கபுராளிகளுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும்.
மூன்றாவது யாசீன் அதிக பரகத் (அபிவிருத்தி) வேண்டியும் ஓதப்படும்.
குர்ஆன் மீது மக்களுக்குள்ள ஆழ்ந்த மரியாதையை தங்களுக்கு சாதகமாக பயண்படுத்திக் கொள்ளும் மார்க்கம் படித்ததாக சொல்லிக் கொள்ளும் மேதாவிகள், மார்க்க வியாபாரிகள் தங்கள் பொருளாதாரத்தை சீராக்கிக் கொள்வதற்காக வேண்டி குர்ஆனையே கொச்சைப்படுத்தும் இந்த கீழ்த்தரமாக காரியத்தை கொஞ்சம் கூட மன உருத்தல் இன்றி சர்வ சாதாரணமாக செய்வதுதான் கவளையாக உள்ளது.
100 ரக்அத்தில் தொடங்கி 1000ம் ரக்அத் வரை…….

இந்த மூன்று யாசீன்களுடன் சேர்த்து அன்றிரவு முழுவதும் சுமார் 100 ரக்அத்கள் தொழுகை நடத்தப்படும். 100 ரக்அத் என்பது குறைந்த பட்சம் என்பதாகும். சில ஊர்களில் 1000ம் ரக்அத் என்றும் வைத்துள்ளார்கள்.
அல்லாஹ்வை நினைத்து நிதானமாக இறையச்சத்துடன் தொழ வேண்டிய தொழுகை என்ற கடமையை கேளி செய்யும் விதமாக 100 ரக்அத் 1000ம் ரக்அத் என்று விழுந்து விழுந்து எழும்புவதற்காக ஆக்கியிருக்கிறார்கள்.
உண்மையான இஸ்லாமிய மார்க்கதில் இப்படியொரு கேளியான, கிண்டளான தொழுகையை அதுவும் ஒரே இரவில் 100 அல்லது 1000ம் ரக்அத் என்று உருவாக்கியிருப்பது அல்லாஹ்வையும், அவன் தூதரையும் கேளி செய்வதற்கு சமனானதாகும்.
இரவு முழுவதும் கால் வீங்கும் அளவுக்கு இறைவனுக்காக நின்று வணங்கிய நபி (ஸல்) அவர்கள். 100 ரக்அத் 1000ம் ரக்அத் தொழுகை இருக்குமாக இருந்தால் அதனை தொழுது காட்டியிருக்கமாட்டார்களா? இதனை சிந்திக்க வேண்டாமா?
மார்க்கத்தில் இல்லாத பாத்திஹாக்களும், பந்தி மேயும் ஆலிம்சாக்களும்.

100 ரக்அத் 1000ம் ரக்அத் தொழுகை மூன்று யாசீன் தவிர, அன்றிரவு வீடுகள் தோறும் பாத்திஹாக்களும் ஓதப்படும். பாத்திஹாக்கள் என்ற பெயரில் பாக்கட் மணியை சரி செய்து கொள்வார்கள் ஆலிம்கள். இப்படி பாத்திஹா ஓதுவதற்காக வரும் ஆலிமுக்கு மூக்கு முட்டுவதற்கு சாப்பாடும் போடப்படும்.
ஆக மொத்தத்தில் தங்கள் வயிரை வளர்ப்பதற்காக மூட நம்பிக்கைகளை உரம் போட்டு வளர்க்கிறார்கள் இந்த ஆலீம்(?) பெருந்தகைகள்.
கபுராளிகள் தினம் (பராத் இரவு) அன்று நோன்பு கூடாது. மத்ஹபுகளின் நிரூபணம்.

கபுராளிகள் தினம் என்று வர்ணிக்கப் படும் இந்த ஷஃபான் 15ம் இரவில் மக்கள் நோன்பு நோற்கிறார்கள் அது நபி வழியென்றும் நினைக்கிறார்கள். ஆனால் இப்படியொரு நோன்பை நோற்பதற்கு நபி வழியில் எங்கும் ஆதாரங்கள் காணப்படவில்லை.
அதே போல் இந்த நோன்பை வணக்கம் என்று நினைத்து செயல்படக் கூடியவர்களின் மத்ஹபு நூல்களும் இப்படியொரு நோன்பு இல்லை என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறது.
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.

(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன்பாகம்: 2, பக்கம்: 273)

நபியவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்றுள்ளார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (இனி) நோன்பை விடவே மாட்டார்கள்என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்‘ என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லைஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!

(நூல் – புகாரி 1969)

ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்ற நபி (ஸல்) அவர்கள் லைலதுல் பராஅத் (பராஅத் இரவு) என்ற ஒன்றில் நோன்பு நோற்க வேண்டும் என்றோ அல்லது மூன்று யாசீன்கள் ஓத வேண்டும் என்றோ அல்லது 100ரக் அத் 1000ம் ரக்அத் என்று தொழ வேண்டும் என்றோ எந்த இடத்திலும் நமக்குக் கற்றுத் தரவில்லை.
இது தவிர ஷஃபான் மாதம் 15ம் நாள் பற்றி சிறப்பித்துக் கூறப்படும் அனைத்துச் செய்திகளும் பலவீனமானவையாகும். ஆக மொத்தத்தில் மார்க்கத்தில் இல்லா ஒரு காரியம், அழகாக மக்கள் மத்தியில் சித்தரிக்கப்பட்டு அல்லாஹ்வின் பேராளும், அவனுடைய தூதரின் பெயராலும் லாவகமாக அரங்கேற்றப்படுகிறது.
இப்படிப்பட்ட தீய காரியங்களை விட்டு விளகி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் மாத்திரம் வாழ்ந்து மறுமையில் வெற்றி பெருவோமாக!

போயா தினத்தில் பிராணிகளை அறுக்கத் தடை உள்ளதா?


நமது இலங்கை திரு நாட்டில் மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம் வழங்கியிருப்பதை போன்று வேறு எந்த நாட்டிலும் வழங்கப்பட்டிருக்காது என்று சொல்லும் அளவிற்கு அரசியல் யாப்பில் மிகவும் தெளிவான பொன் எழுத்துக்களால் சட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை அரசியல் யாப்பில் 10 வது ஷரத்தில் “ ஒவ்வொருவருக்கும் தான் விரும்பும் மதத்தை வழிபடுவதற்கோ ஏற்றுக்கொள்வதற்கோ சுதந்திரம் இருப்பதுடன் எந்த கொள்கையையோ நம்பிக்கையையோ ஏற்றுக்கொள்வதற்கும் சுதந்திரம் உண்டு. அத்துடன்  சிந்திக்கும் சுதந்திரமும், மன சாட்சியின் சுதந்திரமும், மத சுதந்திரமும் உண்டு” என்று மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் தற்போது நடைமுறையில் இன துவேசிகளாலும் காவி தீவிரவாதிகளாலும் இந்த நாட்டின் மத சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டே உள்ளன. பள்ளிவாசல்கள் இடிக்கப்படுவதும், எரிக்கப்படுவதும் தற்போது இன வெறியர்களால் மேற்கொள்ளப்படும் ஈனச் செயல்களாகும். இவற்றை சரியான முறையில் கண்டிக்காதவர்களும், எதிர்க்காதவர்களும், எதிர்ப்பவர்களை தடுப்பவர்களும் சமூகத்தில் தலைவர்களாக மார்க்க அறிஞர்களாக உலா வருவது இந்த சமூகத்தின் சாபக்கேடாகும்.
இது போன்று பல வருடங்களாக போயா தினங்களில் பிராணிகளை அறுக்கக் கூடாது என்று சட்டம் இருப்பதாக முஸ்லிம் அல்லாதவர்களும் அரசு தரப்பை சார்ந்தவர்களும் குறிப்பாக பாதுகாப்பு துறையில் இருப்பவர்களுகம் கூறி வருகிறார்கள். இது உண்மையா இல்லையா என்பதை ஆய்வு செய்யாத நமது சமுதாயம்ää வல்ல இறைவனால் நமக்கு கடமையாக்கப்பட்டிருக்கின்ற உழ்ஹிய்யா குர்பானியையும் போயா தினங்களில் நிறைவேற்றக் கூடாது என்று நினைத்து மார்க்கக் கடமையையும் விட்டு விடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் மார்க்க அறிஞர்கள் என்று மார் தட்டக் கூடியவர்களே போயா தினத்தில் குர்பான் கொடுக்காதீர்கள் என்று அறிக்கை விடுகிறார்கள். என்ன பரிதாப நிலை?
சட்டம் இருக்கிறதா இல்லையா எனற ஆய்வுக்குள் நுழைவதற்கு முன்னால், ஒரு வாதத்திற்கு இவ்வாறு ஒரு சட்டம் இருந்தாலும் அந்தச் சட்டம் நியாயபூர்வமானது தானா? அதை முஸ்லிம்களாகிய நாங்கள் அவசியம் கடைபிடித்தொழுக வேண்டுமா? என்பதை முதலில் நாம் சரிவர அறிய வேண்டும்.
சட்டம் இருந்தாலும் கட்டுப்பட வேண்டுமா?
உதாரணத்திற்கு இலங்கை அரசாங்கம் முஸ்லிம்கள் போயா தினத்தில் பள்ளியில் பாங்கு சொல்லக் கூடாது, தொழக் கூடாது என்று சட்டம் போடுவதாக வைத்துக் கொள்வோம். இப்போது, அரசாங்கம் சட்டம் போட்டு விட்டது; எனவே, இலங்கை முஸ்லிம்களாகிய நாம் போயா தினங்களில் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்லாமல் இருப்போம்; தொழாமல் இருப்போம் எனும் முடிவுக்கு வந்து, நாம் புத்த நாட்டில் வாழ்வதனால் போயா தினத்தில் மாத்திரம் பாங்கு சொல்லாமல் தொழாமல் விட்டுக் கொடுப்போம் என்று அறிக்கை விடுவது சரியா? அல்லது இது இஸ்லாம் மார்க்கத்தை கடைபிடிப்பதற்கு தடைவிதிக்கும் மத துவேஷம்; முஸ்லிம்களின் மத உரிமைகளை பரிக்கும் கயமைத்தனம் என்று இந்த அத்துமீறும் சட்டத்திற்கெதிராக போராடுவது சரியா? இதில் எது அல்லாஹ்வை திருப்திபடுத்தும் நடவடிக்கையாக இருக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
வல்ல இறைவன் தனது திரு மறையில் சூரத்துல் அன்ஆமில் 121வது வசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.
وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ (121)6
அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.
அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டவைகளை உண்பதை தடுப்பதற்கு எதிரிகள் சூழ்ச்சி செய்வார்கள். தர்க்கம் செய்வார்கள். ஆனால், அதற்கு முஸ்லிம்கள் கட்டுப்படக் கூடாது என்பதையும் அவ்வாறு கட்டுப்பட்டால் கட்டுப்படுபவர்களும் இணை கற்பிப்பவர்கள் என்றும் மேற் குறிப்பிட்ட வசனம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
எனவே, குர்பான் கடமையை நிறைவேற்றுவதற்கு எதிராக சட்டமே போட்டாலும் மார்க்கத்தின் அடிப்படையில் அதற்கு கட்டுப்பட முடியாது என்பதை ஐயம்திரிபற எம்மால் விளங்க முடிகிறது. இவ்வாறான சட்டங்களுக்கு ஏற்றாற்போல் வார்த்தை ஜாலம் பேசி, அறிக்கை விட்டு, தாளம் போடுபவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்களே.
மாமிச உணவை புத்தர் தடை செய்துள்ளாரா?
போயா தினங்களில் பிராணிகளை அறுக்கக் கூடாது என்று சொல்பவர்களும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும்: ‘புத்த மதத்தில் பிராணிகளை அறுக்கவே கூடாதென்று அல்லவா இருக்கிறது, பிராணிகளை அறுத்து சாப்பிடுவது புத்த மதத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாக அல்லவா அமைந்துள்ளது’ என்று வலுவான சான்றுகளை முன் வைத்து விட்டு, ‘போயா தினங்களில் குர்பானும் கொடுக்கக் கூடாது’ என்று சொன்னால் ஓர் அளவிற்காவது நியாயம் இருக்கிறதா? என்று சிந்திக்க முடியும். புத்த மதத்தை ஆய்வு செய்து பார்த்தால் பிராணிகளை அறுத்து சாப்பிடும் விடயத்தில் இது கால வரைக்கும் புத்த மக்களே அறிந்து வைத்திராத பல உண்மைகள் அவர்களின் நூற்களில் புதைந்து கிடப்பதை காணமுடிகிறது.
புத்தப் பெருமான் “ත්‍රිකෝටි පාරිශුද්ධ මාංශය” அதாவது மூன்று வகையில் தூய்மையாக்கப்பட்ட மாமிசத்தை உண்பதற்கு அனுமதித்துள்ளார். இவ்வகையான மாமிசங்களை உட்கொள்வதால் எந்த பாவமும் ஏற்படாது என்றும், நானே அவற்றை உண்ணுகிறேன் என்றும் திரிபிடகாவில் மச்சிம நிகாய (ත්‍රිපිටකයේ මජ්ඣිම නිකාය) எனும் நூலில் ஜீவக சூத்தரயவில் (ජීවක සූත්‍රය) குறிப்பிட்டுள்ளார்.
மூன்று வகையில் தூய்மையாக்கப்பட்ட மாமிசம் என்பது 1. අදිට්ඨං (அறுக்கப்படும் மாமிசம் தனக்காக அறுக்கப்பட்டதென்று உண்பவர் கண்டிருக்கக் கூடாது); 2. අසූතං (கேள்விப்பட்டிருக்கக் கூடாது); 3. අපරිසංකිතං (சந்தேகப்பட்டிருக்கக் கூடாது) என்பதாகும். இந்த மூன்று நிபந்தனைகளுக்கு அப்பால் பட்டதை தாராளமாக உண்ணலாம் என்பதே புத்த பெருமானின் போதனையாகும்.
இதே “ත්‍රිකෝටි පාරිශුද්ධ මාංශය” அதாவது மூன்று வகையில் தூய்மையாக்கப்பட்ட மாமிசம் குறித்து “පවත්ත මංසං”பவத்த மந்சந் என்று “මහා වග්ගපාළිය” மகா வக்கப்பாலிய எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “පවත්ත මංසන්ති වික්ඛායිතක මංසං” அதாவது தனக்காகவே அறுக்கப்பட்டதை அறியாமலும் தனக்காக அறுக்கப்படாமலும் வேறொருவரால் அறுக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட பிராணியின் இறைச்சி அந்த மூன்று வகையில் தூய்மையாக்கப்பட்ட மாமிசமாகும். அதை உண்ணலாம்; பாவம் அல்ல.
எனவேää புத்தரின் போதனை படி மேற்குறிப்பிட்ட மூன்று வகையான காரணங்களுக்கும் உட்படாத மாமிசங்களை தாராளமாக உண்ணலாம். புட் சிடியில் (குழழன ஊவைல) உள்ள மாமிசங்கள் யாருக்காகவோ உண்பதற்கு அறுக்கப்பட்டதாகும். எனவேää புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் அந்த மாமிசங்களை தாராளமாக உண்ணலாம். அதில் எந்தச் சந்தேகமும் எள்முனையளவுக்குக்கூட கிடையாது என அடித்துச் சொல்லலாம்.
(குறிப்பு: மேற் குறிப்பிடப்பட்ட மூன்று காரணங்களும் அறிவுப்பூர்வமானது கிடையாது என்பது தனி விஷயமாகும்.)
மேலும், திரிபிடகாவில் உள்ள அந்குத்தர நிகாயவில் (අංගුත්තර නිකාය) புத்த பெருமான் பன்றியின் மாமிசம் உட்கொண்டதற்கு ஒரு சான்று கிடைக்கிறது. புத்த பெருமான் விசாலா எனும் ஊரில் கூடாகார எனும் மண்டபத்தில் இருக்கும் போது உக்க (උග්ග)  எனும் பெயருடைய ஒருவர் வந்து புத்தருக்கு முன்னால் “ஆண்டவரே! நான் உங்களை குறித்து இவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது ‘புன்னியவானாகிய நீங்கள், தனக்கு விருப்பமானதை தர்மம் செய்பவர் தனக்கு விருப்பமானதை பெற்றுக்கொள்வார்’ என்று கூறியுள்ளீர்கள். எனவே, எனக்கு பன்றியின் மாமிசம் மிகவும் விருப்பமானது. அதை நான் உங்களுக்கு தான தர்மம் செய்கிறேன்” என்றார். புத்தர் அவர் மீது கருணைக் கொண்டு அதை சாப்பிட்டுள்ளார் என்பதே அந்த சான்று.
புத்த பிக்குமார்கள் பத்து விதமான மாமிசங்களை உண்ணக் கூடாது என்று புத்த பெருமான் கட்டளையிட்டுள்ளார் என்பதை “මහා වග්ගපාළිය” மகா வக்கபாலி எனும் நூலில் காண முடிகிறது. அந்த பத்து மாமிசங்களாவன:
1.    மனிதனின் மாமிசம்
2.    குதிரையின் மாமிசம்
3.    பாம்பின் மாமிசம்
4.    நரியின் மாமிசம்
5.    கரடியின் மாமிசம்
6.    யாணையின் மாமிசம்
7.    நாயின் மாமிசம்
8.    சிங்கத்தின் மாமிசம்
9.    புலியின் மாமிசம்
10.    கழுதை புலியின் மாமிசம்
மேற்குறிப்பிட்ட பத்து வகையைச் சாராத மாமிசங்களை பிக்குமார்களுக்கே உண்பதற்கு புத்தர் அனுமதி வழங்கியிருக்கிறார். இவைகளும் தடைசெய்யப்பட்டமைக்கான காரணமும் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்த ஓர் இடத்திலும் மிருக காருண்யம் இடம் பெறவில்லை.
எனவே, பிராணிகளை அறுக்கக் கூடாது என்பது புத்த மதத்தின் போதனையும் கிடையாது என்பதை புத்த மதத்தின் மத நூல்களை ஆய்வு செய்யும் போது மிகத் தெளிவாக விளங்க முடிகிறது. மேலே குறிப்பிட்டுள்ள சான்றுகள் அறியாமை இருளை களைவதற்கான ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இன்னும் பல சான்றுகள் நமது கைவசம் உள்ளன.
மேலும்ää பிராணிகளை அறுக்கக் கூடாது என்று சொல்பவர்கள் கூட தினசரி தம்மை அறிந்தோ அறியாமலோ பிராணிகளை சாகடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த 21ம் நூற்றாண்டில் கூட நர பலி கொடுப்பவர்களை பற்றி செய்தித் தாள்களில் படிக்கத்தான் செய்கிறோம்.
இலங்கை பௌத்த நாடு என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டு இன்னொரு புறம் கொலை செய்பவர்களை தூக்கிலிட வேண்டும் என்று சட்டம் வைத்துள்ளார்கள். குற்றவியல் சட்டத்தை மாற்ற முடியாத இவர்களுக்கு எங்கள் மார்க்க சட்டத்தை மாற்ற எக்காரணத்தை கொண்டும் நாங்கள் இடமளிக்கக் கூடாது.
போயா தினத்தில் குர்பான் கொடுக்கக் கூடாது என்றால்ää அதற்குக் காரணம் பௌத்த மதம் என்றால் போயா அல்லாத நாட்களுக்கு அது பொருந்த வில்லையா? போயா அல்லாத நாட்களுக்கும் பொருந்தும் என்றால் இலங்கை கடற்தொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சுää கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சு போன்ற அமைச்சுகளை இலங்கை அரசாங்கம் களைக்க வேண்டும். மது, சூது, களியாட்டங்கள் இன்னும் பல ஆன்மீகத்திற்கு எதிரான அனைத்துத் துறைகளையும் களைத்து விட்டு குர்பான் விடயத்தை கையில் எடுக்க வேண்டும். அப்போதும் குர்பான் சட்டம் அவர்களின் மதத்திற்கு எதிரானது அல்ல என்பதனால் அதை அமுல்படுத்தும் உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்கி மௌனமாக இருக்க வேண்டும்.
போயா தினத்தில் பிராணிகளை அறுக்கக் கூடாது என்று இலங்கை சட்டம் சொல்கிறதா?
போயா தினத்தில் பிராணிகளை அறுக்கக் கூடாது என்று இலங்கை சட்டம் சொல்கிறதா என்று பார்த்தால் சட்டம் தெளிவாகத் தடை விதித்துள்ளது. ஆனால்ää அந்த சட்டம் இஸ்லாத்திற்கும் குர்பான் சட்டத்திற்கும் எந்த வகையிலும் தடையாக அமையவில்லை என்பதே பேருண்மையாகும்.
விடுமுறை நாட்கள் குறித்து 1971ம் ஆண்டின் 29ம் இலக்கம் கொண்ட இலங்கையின் பாராளுமன்றச் சட்டம் ஒன்று இருக்கிது. அதில் போயா தினங்கள் மற்றும் ஞாயிற்றுக் கிழமை நாட்களின் விடுமுறைகள் குறித்து சட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
PART II
OBSERVANCE OF FULL MOON POYA DAYS
Closure of certain establishments on Full Moon Poya Days    13.
(1) No person shall on any Full Moon. Poya Day keep open for business-
(a) any night club, dance hall or any place of public performance; or
(b) any arrack tavern, toddy tavern, foreign liquor shop, liquor bar, or any other premises where any liquor is kept for sale; or
(c) any place where betting on horse-racing or gambling of any description whatsoever is carried on; or
(d) any meat stall.
(2) The provisions of sub-section (1) shall have effect notwithstanding any other law or any terms or conditions of any licence or permit issued under any written law.
Prohibition of slaughter of animals.    14. No person shall, on any Full Moon Poya Day. slaughter any animal for the purpose of sale, or sell or offer for sale, the flesh of any animal.
Permission of certain public performances.    15. Not withstanding the provisions of section 13 it shall be lawful for a person to present any public performance if he obtains the prior written approval of the Minister in charge of the subject of Cultural Affairs,
மேற்குறிப்பிட்டுள்ள சட்டம் என்ன சொல்கிறதென்றால் “போயா தினங்களில் பிராணியின் மாமிசங்கள் விற்கும் நோக்கத்தில் அல்லது விற்பதற்காக விலை பேசும் நோக்கத்தில் எந்த ஒரு பிராணியையும் அறுக்கக் கூடாது” என்பதாகும். அப்படி ஒருவர் சமூகத்தின் பொது நலனுக்காக ஒரு பிராணியை அறுத்து விற்பதற்கு தேவை இருந்தால் அல்லது விற்பதற்கு விலை பேசுவதற்கு தேவை இருந்தால் மத கலாசார அமைச்சின் எழுத்திலான அங்கீகாரம் பெற்று பிராணிகளை அறுப்பற்கு இயலும் என்பதையும் இந்தச் சட்டம் விதிவிலக்களிக்கிறது.
நாம் உழ்ஹிய்யா குர்பான் கொடுப்பது மாமிசங்களை விற்று பிழைப்பு நடாத்துவதற்காக அல்ல. அது நமது மார்க்கக் கடமை. அந்த மாமிசங்களில் அல்லாஹ்விற்கும் எந்தத்தேவையும் கிடையாது. அந்த மாமிசங்களை நாம் ஏழைகளுக்கே விநியோகிக்கிறோம். எனவே, இலங்கை சட்டத்திற்கு நாம் எதிராக செயல்பட வில்லை என்று தெளிவுபடுத்த முஸ்லிம்கள் கடமைபட்டிருக்கறார்கள்.
இவ்வாறு தெளிவு படுத்தாமல் நமது மார்க்கக் கடமைகளை நாங்கள் விட்டுக் கொடுப்போமேயானால் நாம் முஸ்லிம்கள் என்று சொல்வதற்கோ, இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்வதற்கோ அருகதையற்றவர்கள் என்பதே உண்மையாகும்.
முடிவு:
எனவே, போயா தினங்களில் பிராணிகளை விற்கும் நோக்கத்தில் அறுக்கக் கூடாது என்று தான் சட்டம் சொல்கிறதே தவிர வியாபார நோக்கமின்றி, ஏழைகள் பயனடைய வேண்டும் என்பதற்காக உழ்ஹிய்யா – குர்பானி பிராணிகளை அறுப்பதனை இச்சட்டம் எந்த வகையிலும் தடுக்கப்படவில்லை. அவ்வாறு சட்;டத்தால் தடுத்தால் தடுக்கப்படுபவர்கள் அதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமே தவிர எமது மார்க்க உரிமையை ஒருபோதும் எவருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. 

உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை இலவசமக உங்கள் கைத்தொலைபேசி மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். Follow <இடைவெளி> strfn என டைப் செய்து 40404க்கு SMS அனுப்புங்கள்

இவ்வாரம் அதிகம் படிக்கப்பட்டவை

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. www.strfn.blogspot.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger